• May 07 2024

சமந்தாவைத் தொடர்ந்து சுற்றுலாவுக்குச் சென்று ஜாலி பண்ணும் நாகசைத்தன்யா- யாருடன் சென்றிருக்கிறார் தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீடீரென கடந்த ஆண்டு விவகாரத்தை அறிவித்தனர்.

விவகாரத்திற்குபின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியிருந்தது.ஆனால் இது குறித்த சரியான அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


மேலும் சமந்தா - நாகசைத்தன்யா இருவரும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமந்தா மயோசிடிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து முழுமையாகக் குணம் பெற நடிப்பிலிருந்து விலகியிருப்பதோடு சுற்றுலாவுக்குச் சென்றும் வருகின்றார்.


இந்த நிலையில் நாகசைத்தன்யாவும் தனது நண்பர்களுடன் தற்பொழுது சுற்றுலாவுக்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக கஸ்ரடி திரைப்படம் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement