• May 08 2024

250க்கு மேற்பட்ட பெண்கள் சண்டைக் காட்சியில் நடிக்கவுள்ளார்களா?- ஜவான் படத்திலிருந்து வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று கருதப்படும் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இவர் இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

இந்தத் திரைப்படங்கள் யாவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாது வசூலிலும் அள்ளிக் குவித்தது.இதனைத் தொடர்ந்து பாலிவூட் நடிகர் ஷாருகானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.


இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருவதோடு ஹிந்தி ,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

இந்நிலையில், ஜவான் திரைப்படத்தில் 200 முதல் 250 பெண்கள் வரை பங்குபெறும் சண்டைக்காட்சி உருவாக இருப்பதாகவும் இதற்காக மும்பையில் இருந்து அவர்கள் சென்னை வர இருப்பதாகவும் ஏழு நாட்கள் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதோடு  2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பானது  சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாகவும்  கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement