• May 04 2024

திருமணத்திற்கு தனது தாயை அழைக்கும் கோபி- அதிர்ச்சியில் திகைத்து போன ஈஸ்வரி- பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விறுவிறுப்பின் உச்சத்தில் ஒடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ராதிகாவை கோபி திருமணம் செய்து விடுவாரா என அனைவரும் ஆவலாக உள்ளனர்.இதனால் இந்த சீரியலுக்கு   அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இருந்து ஆதரவு கிடைத்து வருகின்றது.

இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை  சுசித்ரா.ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவியை விட்டு பிரிந்து விட்டார் கோபி.


இதனை அடுத்து மீண்டும் ராதிகாவை திருமணம் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில்  தனது திருமணத்திற்கு  தாய் ஈஸ்வரியை அழைக்க கோயிலுக்கு வரும் கோபி, "நான் சொல்ல போறதை நினைச்சு அதிர்ச்சியாக கூடாது. நான் ராதிகாவை கல்யாணம் பண்ண போறேன்.. தயவுசெய்து என் கல்யாணத்துக்கு வந்து உங்கள் பையனை வாழ்த்துங்க அம்மா" என கூறுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி, "என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? எந்த கன்றாவியை பண்ணாலும் உன் கூட வந்துருவேனா? இந்த கல்யாணத்தை எப்படி நடத்துறனு நான் பாக்றேன்டா" என ஆவேசமாக ஈஸ்வரி கூறுகிறார்.இதனால் அதிர்ச்சியடைந்த கோபி திகைத்து போய் நிற்கின்றார் என ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இதனால் அடுத்த வாரமும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement