• May 07 2024

ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாடல் அழகி: சிக்கியது கடிதம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாடல் அழகி ஒருவர் மும்பை அந்தேரி பகுதியில் இருக்கும் ஹோட்டல் அறையில் தூக்கில்  தொங்கியது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த 30 வயது மாடல் அழகி ஒருவர் நேற்று முன்தினம் அந்தேரி பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறை  ஒன்றை புக் செய்து தங்கியிருக்கிறார். இரவு 8 மணிக்கு ஹோட்டலுக்கு வந்தவர், உணவு ஆர்டர் செய்திருக்கிறார்.

மறுநாள் அவரின் அறைக் கதவு திறக்கவே இல்லை என சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவை பலமுறை தட்டியும் பலனில்லை.எனினும்  இதையடுத்து ஹோட்டல் மேனேஜர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து மாஸ்டர் சாவியை வைத்து அந்த அறைக் கதவை திறந்தார்கள். அப்பொழுது அந்த மாடல் அழகி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அத்தோடு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். எனினும் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் மாடல் அழகி தெரிவித்திருப்பதாவது.....

என்னை மன்னித்துவிடுங்கள். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு அமைதி தேவைப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோட்டல் அறையில் மாடல் அழகி பிணமாகத் தொங்கிய சம்பவத்தால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement