• May 03 2024

ஹரி மற்றும் மேகன் மீது வெறித்தனத்தைக் காட்டிய அரச குடும்பத்தினரினால் நேர்ந்த விபரீதம், ஆழ்ந்த அதிர்ச்சியில் மேகன்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் புதுப்பிக்கப்பட்டது.


சசெக்ஸ் இளவரசரரும் இளவரசியுமான ஹரி மற்றும் மேகன் முன்பு வலைபக்கத்தின் பாதியில் காணப்பட்டனர்.


இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுக்கு புதிய அடியாக, அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருவரும் தரமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழே இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமே உள்ளார். இது அவர்களை மிகவும் அவமானப்படுத்தப்படும் விடயமாக பார்க்கப்படுகிறது.


ஹரியும் மேகனும் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் அரச பொறுப்புக்களை தவிர்த்துவிட்டு, மகன் ஆர்ச்சி ஹரிசனுடன் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதாக அறிவித்தனர்.அந்த நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையை வெளியிட்டது, தம்பதியினர் பின்னர் அரச குடும்பத்தின் உழைக்கும் உறுப்பினர்களாக தங்கள் பாத்திரங்களைத் துறப்பார்கள் என்று தெரிவித்தது.


அவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியது பிரபலமாக 'மெக்சிட்' என்று அழைக்கப்படுகிறது. அதையடுத்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஹரியும் மேகனும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே பிரித்தானியாவுக்கு திரும்பினர்.இப்போது, மன்னர் மூன்றாம் சார்லஸ் ஹரி-மேகனின் குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோரை இளவரசர் மற்றும் இளவரசி என்று அழைக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த இந்த ஜோடி காத்திருக்கும் இந்த தருணத்தில், அவர்களுக்கு ஒரு புதிய அடி ஏற்பட்டுள்ளது.


அரச குடும்ப இணையதளத்தில் (Royal Family website) குடும்ப உறுப்பினர்கள் பிரிவில் இருவரும் தரமிறக்கப்பட்டுள்ளனர், ராணியின் உறவினரான இளவரசி அலெக்ஸாண்ட்ராவுக்கும் கீழே ஹரியும் மேகனும் உள்ளனர்.ஹரியும் மேகனும் இப்போது அவர்களுக்கு மேலே தோன்றுபவர்களைப் போலல்லாமல், இனி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரச வட்டாரம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement