• Feb 22 2025

மெகா குடும்பம் மெகா குடும்பம் தான்பா... நடிகர் ராம் சரண் மகளை பார்த்து கொள்ள இவ்வளவு சம்பளமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாத்துறையில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவே காணப்படுகின்றனர். அதிலும், சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை விட, நாளாந்தம் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.


தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள் பிரபலமான நடிகர் மட்டுமின்றி நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான திகழ்கின்றனர்.தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் மிகவும் பிரபலம், அந்த குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த முக்கியமானவர்களில் ஒருவர் ராம் சரண்.


சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துவிட்டார். ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


இவர் 2012ம் ஆண்டு உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 11 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கிளிங்காரா என பெயரிட்டுள்ளனர்.


ராம் சரண் மற்றும் உபாசனா அவரவர் தொழிலில் பிஸியாக இருப்பதால் சாவித்ரி என்ற பெண்ணை குழந்தையை பராமரிக்க நியமித்துள்ளனர். பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தையை பராமரித்த இவர் தற்போது ராம் சரண் குழந்தையை பார்த்து வருகிறார். அதற்காக இவருக்கு மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்களாம். 


Advertisement

Advertisement