தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் இறுதியாக பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இவர் அண்மையில் சீரியல் நடிகை மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து மனைவியுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் முக்கியமாகும்.
அந்த வகையில் தற்பொழுது தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதிலுள்ள புகைப்படத்தில்,"ராத்திரி 10 மணிக்கு தோட்டத்தில் என்னை தனிமையில் சந்திக்கவும். தீபாவளி பரிசு காத்திருக்கிறது" என எழுதியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான முத்து. படத்தில் இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் ரவீந்தர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து,"வர மறந்துவிடாதீர்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருவதுடன், பரிசு என்னவா இருக்கும்? எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!