• May 09 2024

புலம்பிக் கொண்டே கதிருடன் சண்டைக்கு போன மீனா- உண்மை தெரிந்ததும் தனத்தை போய் பார்த்த முல்லை எடுத்த முடிவு

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மீனா யாரோ தன்மீது வண்டியை மோதி விட்டதாக கதிரைத் திட்டிக் கொண்டிருக்க கதிர் திரும்பிப் பார்க்க நீங்களா கொளுந்தனாரே என்று சமாளிக்கின்றார். அப்போது கதிர் எதுக்காக அண்ணி இப்படி தனியாக புலம்பிட்டு போய்ட்டு இருக்கிறீங்க. நானே கேட்கோணும் என்று இருந்தேன் கொஞ்ச நாளாக நீங்களும் அண்ணியும் சரி இல்லை என்ன விஷயம் என்று சொல்லுங்க என்று கேட்கின்றார்.


அதற்கு மீனா அப்பிடி எதுவும் இல்லை நான் கிளம்புறேன் என்று நடந்து விட்டு பின்னர் திரும்பி வந்து இப்பிடி வெய்யில் அடிக்குதே என்னை கொண்டு போய் விடனும் என்று உங்களுக்க தோனலையா என்று கேட்க கதிர் இதை அப்பவே கேட்டன் தானே அண்ணி நீங்க தான் புலம்பிட்டே இருந்தீங்க வாங்க போகலாம் என்று மீனாவை அவருடைய வீட்டிற்கு விடுவதற்காக ஏற்றிச் செல்கின்றார்.

பின்னர் மீனா தன்னுடைய வீட்டு வாசலில் இருந்து புலம்பிக் கொண்டிருக்க அங்கு வரும் முல்லை நீங்களும் அக்காவும் எதையோ மறைக்கிறீங்க எல்லார் கிட்டையும் அக்கா எரிஞ்சு விழுந்திட்டே இருக்கிறாங்க, அக்காமேல உண்மையான பாசம் இருந்தால் சொல்லுங்க என்று சொல்ல மீனா முதலில் சமாளிக்கின்றார். பின்னர் முல்லை வற்புறுத்திக் கேட்டதால் உண்மை முழுவதையும் சொல்லி விடுகின்றார்.


தனத்திற்கு கான்சர் என்று கேள்விப்பட்டதும் முல்லை அதிர்ச்சியடைந்ததோடு கதறி அழுகின்றார். பின்னர் இருவரும் சேர்ந்து தனத்தை பார்க்கச் செல்கின்றனர். முல்லைக்கு உண்மை தெரிந்ததால் முல்லை இப்பவே ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம்.டாக்டர் குணப்படுத்தலாம் என்றுற தானே சொல்லி இருக்கிறாங்க என்று சொல்ல தனம் முல்லையிடம் நீ ரொம்ப அவசரப்படுற கொஞ்சம் பொறமையா இரு என்கின்றார்.

அதற்கு முல்லை மீனா மாதிரி எல்லாம் நான் இருக்க மாட்டேன் வீட்டில எல்லார் கிட்டையும் சொல்லிடுவேன். சீக்கிரமாக ரீட்மென்ட்டை ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறார் அதுக்கு முதல் இன்னொரு தடவை ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணலாம் என்று சொல்ல தனம் யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement