• Apr 27 2024

எனக்கு வயசாகிடுச்சு இனிமேல் இந்த மாதிரி படங்கள் சரி வராது- ஓபனாகவே பேசிய தனுஷ்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷே இயக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில்,தனுஷின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் மரியான்.2013ம் ஆண்டு வெளியான இப்படத்தில்  10வது ஆண்டு கொண்டாட்டத்தை நேற்றைய தினம் படக்குழுவினர் கொண்டாடினர். ஜூம் மீட்டிங் எனும் இணையதளம் வழியாக நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் 

 தனுஷ், ஏஆர் ரஹ்மான், இயக்குநர் பரத் பாலா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மூவரும் மரியான் படம் குறித்த நினைவுகளையும் பல சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து கொண்டனர். மரியான் போன்ற காதல் பின்னணி கொண்ட படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் எனக் கூறிய தனுஷ், அதற்காக இயக்குநர் பரத் பாலாவுக்கு தனது நன்றியை தெரிவித்தார். 


தனுஷிடம் இயக்குநர் பரத் பாலா ஒரு வேண்டுகோள் வைத்தார்.அதாவது மரியான் போன்ற காதல் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என தனுஷிடம் கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்டு சிரித்த தனுஷ், "எனக்கு 40 வயசு ஆகிருச்சு... லவ் படமெல்லாம் இனி செட்டாகாது... அடுத்த தலைமுறை நடிகர்கள் பண்ணட்டும்!" எனக் கூறி நைஸ்ஸாக நழுவிக் கொண்டார். தனுஷின் இந்த பதிலைக் கேட்டு பரத் பாலாவும் ஏஆர் ரஹ்மானும் அவரை கலாய்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement