• May 19 2024

கிரிமினல் பிளான் போடும் மாயா... அடுத்த பலியாடு ரெடி... மாயா வலையில் சிக்கிய மூளை இல்லாத முட்டா பீசு...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர் மாயா செய்யும் அட்டூழியம் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அப்படி என்னத்தான் மாயா செய்கிறார் என்று பார்ப்போம்.


பிக்பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என கேட்டவர்கள் கூட இப்போது அதை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் கடந்த சில வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து தான்.பிக்பாஸ் டைட்டிலை அடிக்க வேண்டும் என்பதற்காக மாயா எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். திட்டம் போட்டு ஒவ்வொருவரையும் வீழ்த்தி வருகிறார். 


பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதில் மாயாவுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொன்றையும் பக்காவாக செய்து வரும் இவர் தற்போது அடுத்த பலியாடை தீனி போட்டு வளர்த்து வருகிறார்.  ஐஷு, நிக்சன் விவகாரத்தில் சர்ச்சைகளுக்கு ஆளாகி ஐஷு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.


அதைத்தொடர்ந்து இப்போது அவருடைய டார்கெட் ஜோவிகா தான். அதை கூட உணராத ஜோவிகா இப்போது அவர்களின் கூட்டணியில் இணைந்து வெறுப்புகளை சம்பாதித்து வருகிறார். இதை விசித்ரா நேற்றைய எபிசோடில் வெளிப்படையாக கூறினார்.


தன்னை காலை வாரி விடுறாங்க என தெரியாமலேயே இந்த பொண்ணு அவங்க கூட சுத்திட்டு இருக்கு.  இவளுக்கு மூளையே இல்ல அப்படின்னு சொல்றேன் என புலம்பி கொண்டு இருந்தார். அவர் தன்னை பலியாடாக மாற்றுகிறார்கள் என்று தெரியாமல் தான் மாயா குரூப்பிடம் பழகி வருகிறார். 


ஆரம்பத்தில்  மெச்சூரிட்டியாக இருப்பது போல் தான் அனைவருக்கும் தெரிந்தது. சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறுவது இப்போது தெரிகிறது. அந்த வகையில் மாயாவின் அடுத்த பலியாடு இவர்தான் என் விசித்திர கூறுகிறார். ஒரு வேலை மாயா கூட்டணியில் இருந்து விலகி தனியாக விளையாடினாள் ஜோவிக்க மாயாவின் வலையில் சிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

Advertisement