மலையாள சினிமாவில் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை மஞ்சு வாரியர். இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
இதன் பின்னர், சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997), சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது அஜித்தின் அடுத்த படமான ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு முக்கிய மலையாள படத்தில் இருந்து மஞ்சு வாரியர் வெளியேறிவிட்டார் என்கிற தகவல் வந்திருக்கிறது.
பிரித்விராஜின் Kaapa படத்தில் இருந்து தான் அவர் வெளியேறி இருக்கிறார். அத்தோடு இரண்டு படங்களுக்கு தேதிகள் ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டதால் அவர் இந்த முடிவெடுத்து இருக்கிறார்.
தற்போது Kaapa படத்தில் அவருக்கு பதில் அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சமீபத்தில் சூரரை போற்று படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் விஜய்சேதுபதி-வைரலாகும் புகைப்படங்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- சீரியலில் மட்டும் தான் அடக்கம்-கவர்ச்சியில் அதகளம் காட்டும் ப்ரியங்கா குமார்..!
- தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகள்..யாரும் எதிர்பார்கலையே..!
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!