• May 03 2024

மணிரத்னம் எனக்கு ஒவ்வொரு நாளும் பீர் வாங்கித் தருவார்- ஷுட்டிங் ரகசியத்தை கூறிய நடிகர் ஜெயராம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கனவு படமாக இருந்தது பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் தொடங்கி பல்வேறு திரைப்பிரபலங்கள் எடுக்க முயற்சித்த இப்படம் தற்போது தான் திரைவடிவம் பெற்றுள்ளது. அதன்படி இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.இப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

அதன்படி இப்படத்தின் முதல் பாகம் நாளை ரிலீசாக உள்ளது. இப்படத்திற்காக கடந்த இரண்டு வாரங்களாக முழுவீச்சில் ப்ரமோஷன் செய்து வந்த பிரபலங்கள் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளதால், முன்பதிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது 


இந்நிலையில் இப்படத்தில் ஆழ்வார்கடியான் நபி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜெயராம். அவரின் கதாபாத்திரத்திற்காக தொப்பை வைக்க வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் வலியுறுத்தியதாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து இருந்தார் ஜெயராம்.

அப்படி அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் தாய்லாந்து ஷூட்டிங்கில் இயக்குநர் மணிரத்னம் தனக்கென ஒரு பீர்-ஐ கொடுத்து அனுப்புவார் என தெரிவித்து இருக்கிறார் .இதனைக் கேட்ட ரசிகர்கள் என்னது சரக்கு வாங்கித் தருவாரா? எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement