• May 03 2024

கத்தி அழுது வெளியே ஓடிய நடிகை.. அட்ஜெஸ்ட்மென்ட் என்ற பேரில் மாளவிகாவிற்கு நடந்த கொடுமை.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு செல்லும் பல பெண்களை வாய்ப்புத் தருவதாக கூறி தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள், இயக்குநர்கள் எனப் பலரும் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன.

அந்த வரிசையில் மாளவிகா ஸ்ரீநாத்துக்கும் அப்படியொரு கொடுமை நேர்ந்துள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில் "கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக மஞ்சு வாரியருக்கு மகளாக நடிக்க ஒரு படத்தில் ஆடிஷனுக்கு அழைத்து இருந்தனர். நானும் என் அம்மா மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு திரிசூரில் அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்றேன். அங்கே தான் அப்படியொரு மோசமான கொடுமை எனக்கு நேர்ந்தது" என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.


மேலும் "அந்த படத்திற்கான ஆடிஷன் எடுத்துக் கொண்டிருந்த நபர் என் கூந்தலை மேக்கப் ரூம் சென்று சரி செய்து விட்டு வரச் சொன்னான். நானும் அங்கே சென்ற போது திடீரென பின்னால் வந்து அவன் என் மார்பகத்தில் கையை வைத்து அழுத்தி விட்டான். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா உனக்கு பெரிய வாய்ப்பு வாங்கித் தருகிறேன் எனக் கூறினான்.

நல்ல வேளை வெளியே என் அம்மா மற்றும் தங்கை இருந்தனர். நான் அங்கேயே உடனே கத்திவிட்டேன். அவனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அங்கிருந்த கேமராவை தள்ளி விட்டு அவனது கவனத்தை திசை திருப்பி விட்டு வெளியே ஓடி வந்து விட்டேன்" எனக் கூறி உள்ளார்.


மேலும் "பல இடங்களில் சினிமாக்காரர்கள் கண்ணியமாக நடந்து கொண்டாலும், சில இடங்களில் நிறைய பொறுக்கிங்க இப்படி பெண்களை அட்ஜெஸ்ட் பண்ணச் சொல்லவதும், அவர்கள் அனுமதியின்றி மேலே கை வைப்பதுமாக மோசமாக நடந்து கொள்கின்றன.

சினிமாவுக்கு வரும் புதிதில் நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே என வெளியே சொன்னால், அதன் பிறகு பிளாக் மார்க் வைத்து இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுக்கி விடுவார்கள் என்ற பயத்தால் தான் பலரும் இதுபோன்ற விஷயங்களை வெளியே சொல்ல பலரும் பயப்படுகின்றனர்" எனவும் கூறி மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் நடிகை மாளவிகா ஸ்ரீநாத்.


Advertisement

Advertisement

Advertisement