• May 04 2024

அரண்மனை போல் இருக்கும் மகாபா ஆனந்தின் வீடு... வெளியானது புகைப்படம்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மாகாபா ஆனந்த். இவர் ரேடியோ ஜாக்கியில் பணிபுரியும் போதும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு இருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்தே விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.


அந்தவகையில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது எது இது’ ஷோ  தான் இவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி.


இதனையடுத்து சூப்பர் சிங்கர், அண்டாகாகசம், ஊ சொல்லுறியா ஊஊ சொல்லுறியா போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.


அதிலும் குறிப்பாக இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ப்ரியங்காவுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. மேலும் இவர் தொகுப்பாளராக பிரபலமானாலும் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் மாகாபா ஆனந் அரண்மனை போன்ற தனது வீட்டின் உடைய அழகிய வீடியோவை தன்னுடைய Youtube சேனலில் வெளியிட்டு இருக்கிறார்.


இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றார். இவரின் வீட்டைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய சொந்த வீடு மாகாபாவிற்கு இருக்கா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement