• May 06 2024

308 பெண்களுடன் தவறாக நடந்த லியோ பட நடிகர் சஞ்சய் தத்- நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த பிரபலம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்துப் பிரபல்யமானவர் தான் சஞ்சய் தத். இவர் 1971ஆம் ஆண்டு வெளியான ரேஷ்மா ஆர் ஸ்ஹேரா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த இவர் தனது கெரியரின் பீக்கில் இருந்தபோது மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 அதாவது 1993ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு தொடர்புடைய ஒருவரிடமிருந்து வாங்கிய ஒரு ரைபிளையும், கைத்துப்பாக்கியையும் வைத்திருந்ததற்காக சஞ்சய் தத்துக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருந்த அவர் சில வருடங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.


சிறை தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு சில காலம் ஓய்வில் இருந்துவிட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார்.வில்லனாக மட்டுமின்றி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார் என்றும்,அவரும் ஒரு கேங்ஸ்டர் என்றும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் ராஜ்குமார் ஹிரானி பாலிவுட்டின் பிரபலமான இயக்குநர். இவர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து சஞ்சு என்ற படத்தை இயக்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருந்தார். அந்த சமயத்தில் சஞ்சய் தத் குறித்து ஹிரானி பேசியிருப்பது மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய சஞ்சு படத்தில் கதாநாயகன் ஏறத்தாழ 308 பெண்களுடன் உடலுறவு வைத்திருப்பார். இதனையடுத்து சஞ்சய் தத் 308 பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதுகுறித்து ராஜ்குமார் ஹிரானி பேசுகையில், "சஞ்சய் தத் தான் டேட்டிங் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் முதலில் ஒரு கல்லறைக்கு அழைத்து செல்வார்.


அங்கு சென்றவுடன் என் அம்மாவை நீ சந்திக்க வேண்டும் என்பதற்காகதான் உன்னை இங்கு அழைத்து வந்தேன் என பெண்ணிடம் சொல்வார் சஞ்சய் தத். அந்த சமயத்தில் அந்த பெண்கள் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை அவர் நோட்டமிடுவார். சஞ்சய் தத் சொன்னதை கேட்டுவிட்டு மனமுருகிய பெண்களுடன் அவர் நெருக்கமாக பழகி டேட்டிங் செய்வார். இத்தகைய தில்லு முல்லு வேலையை செய்துதான் 308 பெண்களை அவர் ஈர்த்திருக்கிறார்" என கூறியிருந்தார். இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது,


Advertisement

Advertisement

Advertisement