• Apr 28 2024

360 ஏக்கர் சொத்து இருந்தும் வாடகை வீட்டில் குடியிருந்த ராஜமௌலியின் குடும்பம்- காரணம் என்ன தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


'நான் ஈ' திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறியவர் தான்  ராஜமௌலி . ஒரு ஈ -யை நாயகனாக்கி ராஜமௌலி காட்டிய வித்தை உலகம் முழுவதும் பிரபலம். இந்த படத்தில் நாயகனாக நானி நடித்திருந்தார். அத்தோடு இந்த படம் மூலம் சமந்தாவும் உலகறிந்த நாயகியானார்.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அதிலும் இவர் இறுதியாக இயக்கிய  RRR படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன நிலையில் அதில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது.


ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் சினிமாவில் கதாசிரியராக இருந்து வருகிறார். பாகுபலி, RRR உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியது அவர் தான். இந்த நிலையில் இவரது குடும்பம் குறிதது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆரம்பத்தில் இவர்களுடைய குடும்பம்  பணக்கார குடும்பமாக தான் இருந்திருக்கிறது. 

360 ஏக்கர் சொத்து இருந்ததாம். ஆனால் ராஜமௌலி சுமார் 10 வயது இருக்கும்போது மொத்த சொத்தும் விற்றுவிட்டார்களாம். அதன் பின் மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்து ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறார்கள்.


13 பேர் வீட்டில் இருந்தாலும், ராஜமௌலியின் அண்ணன் மட்டும் தான் சம்பாதித்தாராம். அதை வைத்து வாடகை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்க்க வேண்டிய நிலை. 22 வயது வரை ராஜமௌலியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாராம். எதாவது செய் என அப்பா தொடர்ந்து சொன்னதால் தான் ராஜமௌலி வாழ்க்கையை சீரியசாக எடுத்துக்கொண்டு பணியாற்ற தொடங்கினாராம் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement