• May 05 2024

அதிக ட்ரோல்கள் காரணமாக லெஜண்ட் சரவணன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தனது கடையின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் அதிகம் பாப்புலர் ஆனார்.

இவர் விளம்பரங்களில் நடித்ததை தொடர்ந்து  சோலோ ஹரோவாக அறிமுகமான படம் 'தி லெஜண்ட்'. அவரே தயாரித்த அந்த படத்தில் பாலிவுட் ஹீரோயின், ஹரிஷ் ஜெயராஜ் இசை, விவேக் உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் இருக்கும் நட்சத்திர பட்டாளம் என வைத்து பிரம்மாண்டமாக படத்தை தயாரித்து இருந்தார்.



லெஜண்ட் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன போதே அதிகம் ட்ரோல்களை இவர் சந்தித்தார். அத்தோடு படம் ஓடிடியில் வெளியானால் இன்னும் அதிகம் ட்ரோல்க்ளை சந்திக்கலாம் என்பதால் தற்போது லெஜண்ட் சரவணன் ஒரு அதிரடி முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இப் படத்தை லெஜண்ட் படத்தை எந்த ஓடிடி நிறுவனத்திற்கும் விற்பதில்லை என அவர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. 


Advertisement

Advertisement

Advertisement