பிரபல பாடகியாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் திரையுலகில் வலம் வருபவர் சின்மயி. ஏஆர் ரஹ்மான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று கூறலாம்.ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி, நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகின்றார்.
அத்தோடு பாடகி சின்மயி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா ஷர்வாஸ் என்ற இரட்டை குழந்தைகளையும் பெற்றெடுத்தார். அதாவது ஒரே பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சின்மயி, தான் தாயானதை சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்தார்.
அவர் வாடகைத்தாய் மூலம்தான் குழந்தைகளை பெற்றெடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது. அதுகுறித்து விளக்கம் அளித்த சின்மயி, தான் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெறவில்லை என்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சின்மயி, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் அந்த பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் 'வைரமுத்துவுக்கு வாழ்த்துக்கள்' என கமெண்ட் செய்ய சின்மயி கடும் கோபம் ஆனார்.
"நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்திலேயே ஊரினது. வளர்ப்பு அப்படி" என இன்ஸ்டாகிராமில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.
Listen News!