• Mar 11 2026

" இறுதி காலத்தில் தனிமரமா நிக்கிறேன்.." கண்கலங்கிய மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவி...

Mathumitha / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகர் ராஜசேகர் மரணத்தின் பின்னர் அவரது மனைவி தாரா அவர்களிடம் வங்கியில் இருந்து பல பிரச்சனைகள் எழுந்தவண்ணம் உள்ளது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் உடைந்து பேசியுள்ளார். மேலும் ராஜசேகரிற்கு இறுதி நேரம் வைத்தியசாலையில் நடைபெற்ற விடயங்களையும் கூறியுள்ளார்.


வைத்தியசாலையில் அனுமதித்தும் அங்கு சரியான மருத்துவம் கிடைக்கவில்லை அவர் ஒரு நடிகராக இருந்ததே பெரிய பிரச்சனை எல்லாத்துக்கும் அவர் ஒரு நடிகர் தானே சூட்டிங்காரங்களை கேளுங்க காசு தருவாங்க என கடைசில அவர் இறந்து மூன்று நாளாகியும் அவர என்னை பாக்க விடல என கூறியுள்ளார்.


நான் சரண்யா வாழ்ந்த வீட்லயே வாழ்ந்தேன் கூட்டு குடும்பமா இருந்ததால அவங்களுக்குள்ள பிரச்சனை வந்து சேகர் தனியாக வீடு எடுத்து கூட்டிட்டு வந்திட்டார். தண்னி அடிக்கிற பழக்கம் இருக்கிறதால எங்களுக்கு குழந்தை இல்லை டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை செய்ய ஆஸ்பத்திரி போய் காட்டினோம் ஆனா அவங்க வீட்ல அடுத்தவங்களோட குழந்தை நம்ம வீட்டுக்கு வேணாம் என மறுத்திட்டாங்க என்னோட குடும்பம் அவரோட குடும்பம் எல்லாத்தையும் இழந்து இப்போ தனி ஆளா நிக்கிறேன் என கண்கலங்கி பேசியுள்ளார்.

Advertisement

Advertisement