• May 06 2024

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே காலில் விழ வைத்த முக்கிய நபர்..! உண்மையை போட்டுடைத்த பிரபலம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன் தாராதான் இப்போது நடிகைகளில் நம்பர் 1. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். 

அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அட்லீ இயக்கிவருகிறார். நயன்தாராவுக்கு அது முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  கடந்த வருடம் ஜுன் மாதம் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். 

அவர் இப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பதையோ இல்லை படத்தின் புரோமோஷனுக்கு வருவதையோ தவிர்த்துவருகிறார். படத்தின் புரோமோஷனுக்கு வருவதை அவர் தவிர்ப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் பத்திரிகையாளர்களை அவர் தவிர்ப்பதற்கு காரணம், நயன் சில பிரச்னைகளை சந்தித்தபோது பல பத்திரிகைகள் தங்கள் இஷ்டத்துக்கு எழுதியதால்தான் இப்போதும் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது.

நயன்தாராவும் சிம்புவும் காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பிறகுதான் பத்திரிகையாளர்களை சந்திப்பதை நயன் முதல்முதலாக தவிர்த்தார். அப்படிப்பட்ட சமயத்தில் அவரை பற்றிய செய்திகளும் பெரிதாக வராமல் இருந்தனவாம்.

அப்படிப்பட்ட நேரத்தில் ஒரே ஒரு மூத்த பத்திரிகையாளர் மட்டும் நயன்தாராவின் சினிமா வாழ்வு குறித்து கட்டுரை ஒன்றை சிறப்பாக எழுதியிருந்தாராம். நாள்கள் செல்ல செல்ல பிரபுதேவாவுடன் காதல், பிரிவு என மீண்டும் பரபரப்பு செய்தியானார் நயன். ஒருவழியாக சில பிரச்னைகள் முடிந்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்தாராம் நயன். அந்த பத்திரிகையாளர் சந்திப்பு மூத்த பத்திரிகையாளரும் வந்திருந்தாராம்.

அவரைப் பார்த்த நயன்தாரா உடனடியாக அவரிடம் சென்று நீங்கள் எழுதிய அந்த கட்டுரை எனது சினிமா வாழ்க்கை மேம்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என கூறி காலில் விழுந்து வணங்கினாராம். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement