பாலிவூட் சினிமாவில் முக்கியமானவர்களாக வலம் வருபவர்கள் தான் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே
இந்த ஜோடி அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சித்தார்த்தும் கியாராவும் ஒருவரையொருவர் மிகவும் காதலிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வந்திருக்கிறார்கள், இப்போது அவர்கள் ஒன்றாக இருக்க விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.
“சித்தார்த்தும் கியாராவும் ஒருவரையொருவர் உறுதியாக நம்புவதால் தங்கள் உறவைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்த ஜோடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் இவர்களின் திருமணம் டெல்லியில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படகின்றது.
கியாராவும் சித்தும் முதலில் பதிவுத் திருமணம் செய்துகொள்வார்கள், பின்னர் அவர்கள் ஒரு காக்டெய்ல் பார்ட்டியை நடத்தலாம். ஆனால் டெல்லியில் எல்லாம் நடக்கும் என்பதால் பிரபலங்கள் வரவேற்பு விருந்துக்கு அழைக்கப்படுவார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது, என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!