தென்னிந்திய சினிமாவில் முக்கியமான பெண் பிரபலங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நமீதா. நடிப்பிற்கு மட்டுமன்றி அழகிற்கும் பேர் போன ஒருவராக இவர் விளங்கி இருந்தார். அதனாலேயே ரசிகர்களால் 'கவர்ச்சி நாயகி' என சிறப்பாக அழைக்கப்பட்டு வந்தார்.
இவரின் கவர்ச்சியில் மயங்கி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உண்டு. விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் எனப் பல பிரபலங்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பின்னர் 2017 இல் அவரின் நீண்டகால நண்பரும் நடிகருமான வீரேந்திர சவுத்ரி என்கிற வீராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆனது திருப்பதியில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இத்தம்பதியினருக்கு சமீபத்தில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் இத்தம்பதியினர் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது.
அதாவது அதில் அவர் கூறுகையில் "வீரா தன்னை ப்ரொபோஸ் பண்ணி 1வருடம் ஆகிடிச்சு. பிக்பாஸ் போகும் வரைக்கும் இவர் என்னோட பெஸ்ட் பிரன்ட்" எனவும் கூறி இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது அவருக்கு என்னுடைய கரெக்டர் பிடித்திருந்தமையால் தன்னை ப்ரொபோஸ் பண்ணியதாகவும் கூறியிருக்கின்றார்.
இவர் கூறிய இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் "உங்க கணவனே உங்க பெஸ்ட் பிரன்ட்" ஆக இருந்தமை நீங்க செய்த அதிர்ஷ்டம் எனக் கூறுவதோடு மட்டுமல்லாமல் அத்தம்பதியினருக்கு கமெண்டுகள் வாயிலாக வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!