• May 19 2024

குஷ்பூ வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்.. கதறித் துடிக்கும் குடும்பத்தினர்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பாக செயல்பட்ட ஒருவரே நடிகை குஷ்பூ. இவர் குறிப்பாக 90காலப் பகுதியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். இவரது நடிப்பில் உருவான பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. 


அந்தவகையில் கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை என்று கூறுமளவிற்கு அனைத்து நடிர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவருக்காக ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், இட்லிக்குக் கூட இவரது பெயரை வைத்து மகிழ்ந்தனர்.


தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவர் தயாரிப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை எனக் கலக்கி வரும் இவர் தற்போது பன்முகத் தன்மை கொண்ட ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார். 


இவ்வாறாக படு பிசியாக சினிமாவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் குஷ்பூ சமீபகாலமாக வெளியில் தலை காட்டுவது என்பது சற்றுக் குறைவாகவே காணப்படுகின்றது. இதோ தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் "தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் நான் வெளியில் தலை காட்டாமல் இருந்தேன், இதற்கு முக்கிய காரணம் எனது அண்ணன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தான்" எனத் தெரிவித்திருந்தார்.. 


இதனைத் தொடர்ந்து இவரின் அண்ணா குணமடைய வேண்டி பலரும் தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வந்திருந்தனர். ஆயினும் கடந்த 4நாட்களாக இவருக்கு வெண்டிலேட்டர்  உதவியுடன் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்றைய தினம் குஷ்பூவின் அண்ணன் உயிரிழந்துள்ளார். தனது அண்ணனின் ஆத்மா சாந்திக்காக அனைவரையும் பிரார்த்திக்குமாறு குஷ்பூ கண்ணீர் மல்க வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் உட்படப் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement