• May 05 2024

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமை... ஜெயிலுக்குப் போன குஷ்பூ... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பூவைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன்னுடைய நடிப்பினால் கட்டிப் போட்டவர். 


ஹீரோயினாக நடித்து வந்த குஷ்பூ தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருவது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றார். இவர் சினிமாவைத் தாண்டி அரசியலிலும் கால் பதித்து இருக்கின்றார். அந்தவகையில் அரசியலில் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மைதேயி சமூகத்தை சார்ந்த மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறி அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்து வந்திருந்தனர். 

இவர்களின் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குக்கி பழங்குடியின மக்கள் போராடி வந்தபோது இரு சாராருக்கும் இடையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் முற்றியமையைத் தொடர்ந்து குக்கி சமூகத்தை சேர்ந்த இரு பெண்களை ஆடைகளைக் களைந்து கொடுமை செய்திருந்தனர்.


இந்த விடயமானது மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அது எவற்றையும் கண்டு கொள்ளாத குஷ்பூ National Commission for Women காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சிறப்பாக இருப்பதை பாராட்டி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினைப் போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் "அவர்கள் உங்கள் பெண்ணாக இருந்தால் பார்த்திட்டு சும்மா இருப்பீங்களா" எனக் கேட்டு குஷ்பூவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement