• May 04 2024

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட குஷ்பூ மற்றும் பிரபு.. 4ஆண்டுகள் உறவில் இருந்தார்களா..? ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பு 1991இல் நடிகர் பிரபுவுடன் இணைந்து ‘சின்ன தம்பி’ என்ற படத்தில் நடித்தார். பி வாசு இயக்கத்தில் வெளியான இப்படமானது அந்தக் காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து. இதனையடுத்து சில வருடங்கள் இருவரும் காதல் உறவில் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.


இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான காக்கிநாடா ஷியாமளா இவர்கள் இருவரது உறவு குறித்துப் பரபரப்பு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "குஷ்பு மிகவும் நல்ல பெண். அவரும் பிரபுவும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தனர். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது உறவுக்கு பிரபுவின் மனைவி கொஞ்சமும் சம்மதிக்கவில்லை. 

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் திருமணம் பிரபுவின் குடும்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் இறுதியாக பிரிந்தனர். ஆனால் அது இப்போது நல்லாதாக மாறி உள்ளது. ஏனெனில் குஷ்பு நல்ல இயக்குநரை திருமணம் செய்தார். நல்ல பிள்ளைகளை பெற்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் "பிரபுவை பிரிந்த பிறகு குஷ்பு மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனால் படிப்படியாக அந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு 2000-ஆம் ஆண்டு கோலிவுட் இயக்குநர் சி சுந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபுவுடனான தனது உறவு குறித்து குஷ்புவே வெளிப்படையாக பலரிடம் கருத்து தெரிவித்துள்ளார். நான்கு வருடங்களாக பிரபுவுடன் உறவில் இருந்ததாக கூறினார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் "இவர்கள் இருவரும் கடந்த 1993-ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பிரபு ஏற்கனவே திருமணமானவர் என்பதால், அவரது தந்தை சிவாஜி கணேசன் அவர்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதல் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக திருமணமாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு பிரிந்ததாக குஷ்புவே தெரிவித்தார்" எனவும் கூறியுள்ளார் நடிகை காக்கிநாடா ஷியாமளா.

Advertisement

Advertisement

Advertisement