தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்து வருகின்றார்.
குறிப்பாக 2000களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் 2013 இல் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
எனினும் தமிழில் இவருக்கான அறிமுகத்தை கொடுத்தது விக்ரம் பிரபு நடிப்பில் உருவான 'இது என்ன மாயம்' என்ற திரைப்படம் தான். சிறந்த கதாப்பாத்திரம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான இவர் சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற கீர்த்தி சுரேஷ் அடுத்து மாமன்னன், தசரா, போலா ஷங்கர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் ஆயுத பூஜை, விசயதசமி கொண்டாட்டங்கள் நன்றாக நடந்து வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது விலையுயர்ந்த காருக்கு தனியாக பூஜை போட்டுள்ளார். தனது வளர்ப்பு நாயுடன் நின்று காருக்கு பூஜை போடும்போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கும் காரின் விலை மட்டுமே ரூ. 1.20 கோடி முதல் ரூ. 1.80 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.
Listen News!