• May 05 2024

தயாரிப்பாளராக களமிறங்கவுள்ள கீர்த்தி சுரேஷ்... அப்போ இனிமேல் நடிக்க மாட்டாங்களா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்றிருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்கிறார். அந்தவகையில் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும் தற்போது 'மாமன்னன், சைரன்' ஆகிய 2 படங்கள் இவரின் கைவசம் உள்ளன. 


அத்தோடு அஜித்குமாரின் 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் 'போலோ சங்கர்' படத்தில் சிரஞ்சீவியிடன் இணைந்து நடித்து வருகிறார். இவ்வாறாக இதுவரை காலமும் சினிமாவில் ஹீரோயினாக திகழ்ந்து வருகின்ற இவர் தற்போது இன்னொரு கட்டத்தையும் தாண்ட இருக்கின்றாராம்.


அதாவது கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக முடிவு செய்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவரது தந்தை ஏற்கனவே மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடித்த 'வாஷி' படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தார். 


இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நேரடியாகவே நல்ல கதையம்சம் உள்ள சிறுபட்ஜெட் படங்களை தனது பெயரில் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறாராம். இதற்காக இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருவதாக தகவல் பரவி உள்ளது. இவ்வாறாக நடிப்புடன் இணைந்து சினிமாவில் தயாரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றார் கீர்த்தி சுரேஷ்.


Advertisement

Advertisement

Advertisement