• May 02 2024

பூக்கோலம் போட்டு கேரள ஸ்டைலில் சத்யா விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்- அடடே இந்த நடிகர் எல்லாம் போயிருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் 'மாமன்னன்'. இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பதோடு  பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இப்படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிப்பதாகவும் இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் "மாமன்னன்" என கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்த மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.


படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சேலத்தில் கடந்த மே மாதம் முதல் வாரம் ஆரம்பமாகியது. மே மாதம் 8 ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டன. பின்னர் மாமன்னன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இன்று ஓணம் திருநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படக்குழுவுக்கு பூக்கோலம் போட்டு கேரள ஸ்டைலில் சத்யா விருந்து வைத்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement