• Sep 17 2024

வண்ணமயமான தாவணிப் புடவை அணிந்து குடும்பத்துடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய நடிகை மாளவிகா மோகனன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான  'பட்டம் போலே' எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமாகமாகினார்.


இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இது தவிர தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்  சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். 


இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.   இந்த புகைப்படங்களில் மாளவிகா மோகனன் குடும்ப நண்பர்களுடன் சகோதரர் ஆதித்ய மோகனன், தந்தை மோகனன், தாயார் பீனா ஆகியோர் உடன் உள்ளனர்.


இது தொடர்பான பதிவில், "அன்புள்ள மக்கள் அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்! ♥️ 🌾🌺🌼 எனது சிறந்த நண்பர்களுடன் சேர்ந்து பூக்களால் 'பூக்களம்' செய்து அன்றைய தினத்தை ஆரம்பித்தேன். நண்பர்களுடன் சத்யா விருந்து உண்டு மகிழ்ந்தோம்.


மேலும் இந்த ஆண்டு மிகச்சிறந்த கேரள ‘கசவு’ சேலையை மிஸ் செய்துவிட்டு, அதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்காக வண்ணமயமான தாவணிப் புடவை அணிந்துள்ளேன்! நீங்கள் அதை விரும்புகிறீர்களா?" என மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement