• May 05 2024

மீண்டும் போலிஸ் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்- அதுவும் யார் கூட தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இறுதியாக சாணி காயிதம், சர்காரு வாரி பட்டா , குட் லக் சகி, மரைக்கர் அரபிக்கடலிண்டே சிம்மம் உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தன. 

இது தவிர ரஜினி நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த திரைபடபடத்திலும் தங்கை காரெக்டரில் நடித்திருந்தார். இருப்பினும்  இப்படங்கள் யாவும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இருப்பினும் இவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி படவாய்ப்புகள் குவிவதாக கூறப்படுகின்றது.


கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி விட்டது.ஹீரோ, விஸ்வாசம், அண்ணாத்த படங்களில் பணியாற்றிய ஆன்டனி பரத்வாஜ் தான் இந்த படத்தை இயக்குகிறார். ஜெயம் ரவியின் அடங்க மறு, பூமி படங்களை தயாரித்த Home media makers தான் இந்த படத்தையும் தயாரிக்க போகிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 29 ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

லேட்டஸ்ட் தகவலின் படி, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சாணி காயிதம் படத்தில் கான்ஸ்டபிள் ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது இரண்டாவது முறையாக காக்கி யூனிஃபார்ம் போட உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement