• May 04 2024

எழிலுக்கும் சிவசங்கரிக்கும் இடையில் முற்றிய வாக்குவாதம்... போலீசிடம் வசமாக சிக்கிய கயல், ஆனந்தி... இனி நிகழப்போவது என்ன..? 'Kayal' promo..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் எழில் தனது தாய் சிவசங்கரியிடம் "எதுக்கு கயலை இந்த வீட்டு மருமகளாக ஆக்க கூடாது" எனக் கேட்டு வாதாடுகின்றார். பதிலுக்கு அவளை எனக்குப் பிடிக்காது என சிவசங்கரி கத்துகின்றார். அதற்கு எழில் எனக்கு கயலை பிடிச்சிருக்கு அம்மா என்கிறார்.


மறுபுறம் கிச்சனில் பாத்திரத்தை தூக்கியா மூர்த்தி இந்த பாத்திரம் என்ன பிண கனம் கனக்குது என்கின்றார். இதனைக் கேட்டதும் ஆனந்தியும், பயத்தில் முழிக்கின்றனர். ஏனெனில் அதற்குள் தான் இறந்த பிரபுவின் உடலை மறைத்து வைத்திருக்கின்றனர்.


இதனையடுத்து போலீசார் அந்த பாத்திரத்திற்கு அருகில் சென்று திறந்து பார்க்க முயல்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. இதனையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement

Advertisement