• May 08 2024

திருவிழாவிற்கு போகவிடாமல் தடுப்பதற்கு திட்டம் போடும் கார்த்தி- சுந்தரி எதிர் கொள்ள இருக்கும் புதிய சவால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சன்டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளதோடு டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் டாப் 5ல் இடம் பெற்றுள்ளது.

இந்த சீரியலில் கதாநாயகி வேடத்தில் நடித்து வரும் நடிகை கேப்ரியல்லாவின் நடிப்புக்காக பலரும் இந்த தொடரை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இவர் அனுவின் கம்பெனிக்கு சி இ ஓ ஆகிவிட்டார். அத்தோடு . அனுவிற்கு சுந்தரியின் கணவன் தான் கார்த்தி என்பது இப்போது வரை தெரியாது. ஆனால் சுந்தரிக்கோ அனுவை கார்த்தி ஏமாற்றி வருவது குறித்த பல விஷயங்களும் நன்கு தெரியும்.

இருப்பினும் அனு தற்போது கர்ப்பமாக இருப்பதால் மட்டுமே சுந்தரி எந்த விஷயத்தையும் அனுவிடம் சொல்லாமல் உள்ளார். தற்போது, கார்த்தியின் அக்கா கணவரான முருகன், கிருஷ்ணாவிற்கு போன் செய்து ஊரில் நடக்க உள்ள திருவிழாவிற்கு கார்த்தியையும் அழைத்து வருமாறு சொல்கிறார்.

கிருஷ்ணா சுந்தரியிடம் கார்த்திக் திருவிழாவிற்கு வராதது பற்றி கூறுகின்றார். ஆனால் அவர் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. மேலும் சுந்தரியின் மாமனார் கார்த்திக் சென்னையில் இருப்பதை அறிந்து திருவிழாவிற்கு முன்னாடியே வரும்படி கூறுகிறார். இதனைால் கோபமடைந்த கார்த்திக் சுந்தரிதான் இதற்கெல்லாம் காரணம் என்று சுந்தரியை திருவிழாவிற்கு போகவிடாமல் தடுப்பதற்கு திட்டம் திட்டுகிறார்.

பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இத்தொடரில் அடுத்த என்ன நடக்கும் என்றும், கார்த்தியின் திட்டங்களை சுந்தரி எப்படி முறியடிப்பார் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement