• May 01 2024

"வால் நட்சத்திரம் மாதிரி இருந்திச்சு"... மணிரத்னத்தை கலாய்த்த கார்த்தி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான ஒரு திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது கடந்த வருடம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.


முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆவது பாகம் தற்போது உருவாகி உள்ளது. அந்தவகையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படகுழுவினர் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.


அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கார்த்தி கூறிய விடயமானது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றது. அந்தவகையில் மணிரத்னத்துடனான செட் அனுபவம் குறித்துக் கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு கார்த்தி பதிலளிக்கையில் "நாங்க சரியாக வேலை செய்யல என்பதை எங்க சீனியேர்ஸ் சொல்லிட்டே இருப்பாங்க, நாங்க என்க யூனியர்ஸ்க்கு சொல்லிட்டு இருப்போம். அப்படித்தான் தலைமுறை தலைமுறையாக போய்க் கொண்டிருக்கின்றது" என்றார்.


அதுமட்டுமல்லாது "இந்தப் படத்தில் மட்டும் தான் மணி சேர் ரொம்ப உற்சாகமாய் இருந்தாரு, என்ஜாய் பண்ணிட்டு இருந்தாரு, எல்லா சீனிலும் அவர் ரொம்ப ஜாலியாக இருந்தாரு. த்ரிஷாவைக் கூடி நிறைய இடத்தில பாராட்டி இருக்கார். அந்தப் படத்தில் எப்படி ஒரு வால் நட்சத்திரம் வருதோ அதே மாதிரி இந்தப் படத்தில் மணி சேர் செய்த எல்லாமே அதிசயம். அந்தளவிற்கு ரொம்ப சந்தோசமாக இருந்தாரு" எனவும் கூறியுள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தை சாதாரண படத்துடன் ஒப்பிடாதீர்கள் எனவும் அப்பேட்டியில் கூறியுள்ளார் கார்த்தி. 

Advertisement

Advertisement

Advertisement