• May 28 2024

அபியின் காரெக்டரை தப்பாக மாற்றி சுடரின் அப்பா வருண் தான் என கதை கட்டிய கண்மணி- அதிர்ச்சியில் உறைந்த வெற்றி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் வெற்றி சுடர் தான் தன்னுடைய குழந்தை எனத் தெரிந்ததால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றார்.அத்தோடு எப்படியாவது குடும்பத்துடன் இணைய வேண்டும் அபியை எப்படி சமாதானப்படுத்துவது என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.

இதனால் கண்மணி தான் வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக சித்தப்புவிடம் சென்று அபியின் நண்பன் வருணுக்கும் அபிக்கும் தொடர்பு இருப்பது போலவும் சுடர் வருணின் பிள்ளை தான் என விஜி சொன்னதென்று பொய் சொல்லி விடுகின்றார். அதே போல விஜியிடம் சென்று வருண் பற்றி வெற்றியின் நண்பர்கள் கேட்கிறார்கள் நான் என்ன சொல்லட்டும் என்று கேட்கிறார்.


விஜியை குழப்பி விட்டு விஜி சொல்வதை புரிந்து கொள்ளாமல் கண்மணி சொன்ன மாதிரி வருணின் குழந்தை தான் சுடர் என்பது போல நினைத்துக் கொள்கின்றார். இதனால் சித்தப்புவும் விஜியிடம் நேராகக் கேட்காமல் கண்மணி சொன்னது தான் சரி என நினைத்து வெற்றியிடம் போய் சொல்கின்றார்.


அதாவது சுடர் உன்னுடைய குழந்தை இல்லை என்றும் அபிக்கு வருண் என்பவருடன் தொடர்பு இருக்கு என்றும் சொல்லி விடுகின்றார். இதனால் வெற்றி அதிர்ச்சியடைகின்றார். இதனால் அடுத்து வெற்றி என்ன செய்யப் போகின்றார் சுடரை தன்னுடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்வாரா அல்லது கண்மணி வீசிய வலையில் சிக்குவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement