• Jul 27 2024

தமிழ் சினிமாவுக்கு அதிர்ச்சி கொடுத்த கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! யாழில் சற்றுமுன் பரபரப்பு?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட குழப்பத்தால் பலமுறை இடைநிறுத்தப்பட்டு இறுதியில் குறுகிய நேரத்திற்குள் நிறைவடைந்தது.

விழா ஏற்பாட்டாளர்களின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட தவறுகளே இந்த நிகழ்வு இடைநிறுத்தப்படுவதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இதில் கலந்து கொள்வதற்காக  ரம்பா, யோகி பாபு, பாலா,சாண்டி மாஸ்டர், புகழ், தமன்னா,  சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, கலா மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்களும் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தனர்.


இந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலா மாஸ்டர், குஷ்பு ஆகியோர் யாழிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆரம்ப முதலே இதற்கு எதிர்ப்பு காட்டப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து குறித்த நிகழ்ச்சிக்கு குஷ்பு பங்கேற்காத நிலையில், கலா மாஸ்டர் மட்டும் இந்த நிகழ்ச்சிகான ஏற்பாட்டை கவனித்து வந்தார்.

இவ்வாறான நிலையிலே யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement