• May 18 2024

கணேஷ் இருப்பது தெரியாமல் அவரது அம்மாவுக்கு போன் பண்ணிய அமிர்தா- செழியனிடம் ஜெனி கேட்ட கேள்வி- Baakiyalakshmi Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்த கணேஷ் அமிர்தா எங்கே என தன்னுடைய ரூமுக்குள் போய் பார்க்கின்றார். இந்த நேரம் ஹாலில் மாட்டி வைத்த போட்டோவை அவரது அப்பா எடுத்து மறைத்து வைத்து விடுகின்றார். பிின்னர் அவர் வெளியே வந்ததும் அமிர்தா வீட்ல இல்லை அவங்க ஊருக்கு போய்ட்டா போன் பண்ணி பேசுவோம் என்கின்றார்.


மறுபுறம் ஜெனி பாக்கியாவுக்கு போன் பண்ணி ,நலம் விசாரிப்பதோடு டூர் பற்றியும் கேட்கின்றார். இதனால் பாக்கியா உனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும் என்று கேட்ட போது எனக்கு அமிர்தா எல்லாவற்றையும் சொல்லிட்டாங்க என்று சொல்கின்றார். அப்போது செழியன் பேசினானா என் கூட என்று பாக்கியா கேட்க, அவன் வேலை வேலைனு திரியிறான் ஆன்ட்டி என்று ஜெனி சொல்கின்றார்.

பின்னர் கணேஷிற்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்க,கணேஷ் அமிர்தாவிடம் போன் பண்ணி பேசினீங்களா என்று கேட்ட போது, அமிர்தா ஊர்ல இல்லை சென்னைக்கு போய்ட்டா வர இரண்டு மூன்று நாள் ஆகும் வந்ததும் சொல்லிப்போமே. இப்போ சொன்னால் அவ பதறிப்போய்டுவா என்று அவர்கள் சமாளிக்கின்றனர்.


அதுவும் சரி தான் என்று கணேஷ் உள்ளே போனதும் அமிர்தா போன் பண்ணி கொடுக்க கணேஷின் பெற்றோர் ராம மூர்த்தியிடம் பேசுகின்றார். நீங்க கவலைப்படாதீங்க உங்கள எழில் நல்லாப் பார்த்துப்பான் என்று ஆறுதல் தெரிவிக்கின்றார். தொடர்ந்து செழியனுக்கு ஜெனி கால் பண்ணி பேசுகின்றார். 


எப்போ என்னைப் பார்க்க வருவ என்று கேட்கும் போது செழியன் கொஞ்சம் வேலை அதான் வர முடில என்று சமாளிக்கின்றார். பின்னர் மாலினி போர் அடிக்குது படம் பார்க்கலாமா என்று கேட்க இருவரும் சேர்ந்து படம் பார்க்கின்றனர். தொடர்ந்து இனியா அசெயினமென்டுக்காக காட்டுக்குள் எல்லோருடனும் சேர்ந்து போய் தகவல் திரட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement