தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தினை அடுத்து அகிலன் எனனும் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் தனக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் என வந்ததாகவும், எனவே தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, தன்னை தனிமை படுத்திகொண்டு, இருப்பதாகவும் கூறினார்.
இதற்காக உரிய சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Earlier this evening I tested positive for Covid-19. Following all protocols, I have immediately isolated myself. I sincerely request all those that have come in contact with me to get themselves tested if necessary. Mask up. Stay safe! God bless.
மேலும் கொருானாத் தொற்றின் பாதிப்பு இந்த ஆண்டு முழுமையாக குறைந்திருந்த போதும் அதன் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்வதை கடைப்பித்தாலும், சுகாதாரத்துடன் இருந்தால் மட்டுமே, கொரோனா அதிகமாவதை தடுக்க முடியும் என தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!