• May 05 2024

அருண்மொழி வர்மனாக சாதித்த ஜெயம்ரவி... பாராட்டுத் தெரிவித்த அண்ணன்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரைப் பிரபலங்களான ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. சோழர்கால வாழ்வியலை ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் மணிரத்னம் வெற்றி பெற்றுள்ளார் என்பதை இந்தப் படத்தின் வெற்றி எடுத்துக் காட்டியுள்ளது.

சர்வதேச அளவில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் அனைத்து தரப்பு ரசிகர்களை மட்டுமல்லாது பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வனாக, அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவி ஸ்கோர் செய்துள்ளார். அவரது உடல்மொழி, குரல் எப்படி ஒரு கம்பீரமான அரசனுக்கு பொருந்தும் என்ற கேள்வி படம் வெளியாவதற்கு முன்னதாக எழுந்தது.



ரசிகர்கள், விமர்சகர்களின் கேள்விகள், சந்தேகங்களை தற்போது வெற்றிக் கொண்டுள்ளார் நம்ம ஜெயம்ரவி. அதாவது அனைத்து தரப்பினரையும் தன்னுடைய கேரக்டர் மூலம் வெகுவாக கவர்ந்துள்ளார். க்ளைமாக்சில் இவரது நடிப்பு மிரட்டியுள்ளது. 

இந்நிலையில் தன்னுடைய தம்பியின் நடிப்பு குறித்து மிகுந்த உற்சாகம் தெரிவித்துள்ளார் அவரது அண்ணன் மோகன் ராஜா. அதாவது தன்னுடைய தம்பியின் நடிப்பிற்கு கிடைத்துள்ள அதிகப்படியான வரவேற்பானது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். 

இவ்வாறாக தம்பிக்கு பாராட்டுத் தெரிவித்த அண்ணனின் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement