• May 04 2024

கையெடுத்து கும்பிட்டு கண்ணீர்விட்டு நடித்த ஜனார்த்தனன்..மனம் மாறிய ஜீவா.....இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோரஸ்..இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம் வாங்க...

ஜனார்த்தனனை ஜீவாவும், மீனாவும் மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு செல்கின்றனர். மீனாவே தந்தைக்கு இப்படி ஆகிட்டு என்று கதறி அழுது கொண்டு இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து ஜீவாவிடமும் மீனாவிடமும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி நடித்துக் கொண்டே இருக்கிறார்.

மொத்த குடும்பமும் ஜீவாவையும் மீனாவையும் தேடிக்கொண்டு  அங்கே காத்து கொண்டு இருக்கின்றனர். அப்போது மல்லியின் குடும்பமும் அங்கே வந்து சேர ஐஸ்வர்யா அவர்களிடம் தன்னுடைய கணவர் கவர்மெண்ட் வேலை செய்வதாகவும் அதனால் எங்க வீட்டில் ஈசியாக நாங்க ஏசி வாங்கி விடுவோம் என்றெல்லாம் பெருமையாக பேசி பேசிக்கொண்டிருக்கிறார்.


மருத்துவமனையில் ஜீவாவிடம் மீனாவின் அப்பா எனக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயமாக உள்ளது. நீங்கள் தான் எனக்கு பிறகு குடும்பத்தை பார்க்க வேண்டும். என்னுடைய பிசினஸை எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். மீனாவின் அம்மாவும் ஒரு பக்கமாக அழுது கொண்டிருக்கிறார். இதன் பிறகு ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்து ஜீவாவும் மீனாவும் ரிப்போர்ட்டை வாங்க போகின்றனர்.

 ரிப்போர்ட்டில் ஜனார்த்தனனுக்கு எதுவும் இல்லை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகலாம் என்று சொன்னதை கேட்டு ஜீவாவும் மீனாவும் ஜனார்த்தனிடம் நேராக உங்களை வீட்டில் கூட்டிக்கொண்டு விட்டுவிட்டு நாங்கள் வளைகாப்புக்கு போக போகிறோம் என்று கூற ஜனார்த்தனன் திகைத்துப் போய் விடுகிறார். எப்படியாவது ஏதாவது செய்யுங்க என்று கண்களாலே மீனாவின் அம்மா ஜனார்த்தனனிடம் சொல்கின்றார்.

அதே நேரத்தில் மண்டபத்தில் எல்லாரும் கதிரை முல்லையின் அருகில் வந்து உட்கார கூப்பிடுகின்றனர். கதிரும் முல்லையும் வாசலை பார்த்தபடியே இருக்கின்றனர். கடைசி நேரத்தில் ஜீவாவும் மீனாவும் வாசலில் குழந்தையோடு நிற்கின்றனர். அதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டு இன்ப அதிர்ச்சி அடைகின்றனர். மூர்த்தி ஜீவாவை பார்த்ததும் முகம் மாறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது..

Advertisement

Advertisement

Advertisement