• May 08 2024

இது ஒன்றும் அவ்ளோ ஈசி இல்லை எல்லாருக்கும் இது போகணும்- உருக்கமாகப் பேசிய நடிகை சாய் பல்லவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

கஸ்தூரிமான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் சாய்பல்லவி.இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் தான் நல்ல அடையாளத்தைக் கொடுத்து.

இப்படத்தில் மலர் டீச்சராக வந்து இளைஞர்களின் மனதைக் கவர்ந்திருந்தார்.இதைத்தொடர்ந்து மலையாளத்தில் காளி, தெலுங்கில் ஃபீடா, மிடில் கிளாஸ் அப்பாயி, தமிழில் தியா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷின் மாரி 2 படம் இவரின் வேறு ஒரு கோணத்தை பிரதிபலித்தது. இந்த படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் தான் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது என்று கூட கூறலாம்.


தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக கார்கி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.60 வயது தந்தையை பாலியல் குற்றம் என்கிற பெயரில் காவல்துறை கைது செய்ய அந்த வழக்கில் இருந்து தன் தந்தையை எவ்வாறு நாயகி மீட்கிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருந்தது. 

இந்த நிலையில் அண்மையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற  ஓர் விழாவில் சாய் பல்லவி கலந்து கொண்டு பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் கலந்து கொண்ட சாய்பல்லவி சிறுவயதில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இன்னொருவரிடம் கூறலாம் என்பதே மிகப்பெரிய ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. 


முன்பெல்லாம் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்சினையை யாரிடம் தெரிவிக்க இயலாமல் மனவேதனைக்கு உள்ளாகும் பிள்ளைகளே அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஒரு எண்ணை தட்டினால் போதும் தங்களது மன வேதனைகளை இன்னொருவரிடன் பகிர்ந்து கொள்ள முடியும்.இது அவ்வளவு ஈஸி இல்லை எல்லோருக்கும் இது போய் சேர வேண்டும் என பேசி உள்ளார்.இவரின் இந்த கருத்து தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement