• May 04 2024

விக்ரமையும் ஜெயம் ரவியையும் Bro என அழைக்க மிகவும் கஷ்டமாக தான் இருந்தது- வெளிப்படையாகப் பேசிய த்ரிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களின் பிரமாண்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படமானது கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றதாகும். இதனை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். 


இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள்,கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷாவிடம், கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. முன்னதாக, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிறைய படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். அதே போல, விக்ரமுக்கு ஜோடியாகவும் ஒரு சில படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். அப்படி இருக்கையில், பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர், த்ரிஷாவுக்கு சகோதரர்களாக நடித்துள்ளார்கள்.


இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகை த்ரிஷா, “உண்மையில் Bro என அழைக்க மிகவும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால், நீங்கள் பொன்னியின் செல்வன் படம் பார்க்கும்போது இவை எதுவும் உங்கள் மனதில் தோன்றாது, நாங்கள் அதனை அப்படிதான் கையாண்டிருக்கிறோம்” என கூறி உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement