• Jun 26 2026

இனிமே ஆர்யாவை வச்சு படம் எடுக்க பயப்படுவாங்க.. ‘அனந்தன் காடு’ பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் ஆர்யா நடிப்பில் நேற்று வெளியான ‘அனந்தன் காடு’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. குறிப்பாக மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களை ஒரே நேரத்தில் கவரும் வகையில் இப்படம் உருவாகியிருந்ததால், இது ஆர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என வர்த்தக வட்டாரங்கள் கணித்திருந்தன. ஆனால், முதல் நாள் வசூல் முடிவுகள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபீஸ் தகவல்களின் படி, படம் முதல் நாளில் உலகளவில் மொத்தமாக சுமார் 75 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதில் மலையாள பதிப்பில் சுமார் 45 லட்சமும், தமிழ் பதிப்பில் சுமார் 30 லட்சமும் வசூலாகியுள்ளது. இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்க வசூல் சற்றே மந்தமாக இருந்தது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முரளி கோபி எழுத்தில், ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்யாவுடன் முரளி கோபி, இந்திரன்ஸ், சுனில், ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் வார இறுதி நாட்களில் வசூல் உயரக்கூடும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘அனந்தன் காடு’ திரைப்படம் ஆரம்ப நாளில் சற்று மெதுவாக தொடங்கியிருந்தாலும், அடுத்த நாட்களில் அதன் வரவேற்பு எப்படி மாறுகிறது என்பதே முக்கியமானதாக இருக்கும்.

Advertisement

Advertisement