• Apr 26 2024

எங்களை ஒரு தடவை அவரை பார்க்க விட்டாலே போதும்- கவலை தெரிவித்த அஜித்தின் வீட்டில் வேலை செய்த பணியாளர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். அவரின் மறைவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.85 வயதான அஜித்தின் தந்தை உயிரிழந்ததற்கு திரைப்பிரபலங்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள் இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரது உடலானது பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்குக் கொண்டு சொல்லப்பட்டது. கிழக்கடற்கரைச் சாலையில் இருந்த அவரது வீட்டிலிருந்தே உடல் எடுத்துச் செல்லப்பட்டது என்று கூறப்பட்டது.


மேலும் இந்த இறுதிச்சடங்கில் அஜித்துடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் தனது தந்தையின் உடலை மின் மயானத்திற்கு அஜித் தூக்கி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழத்தியிருந்தது.


இப்படியான நிலையில் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் எனப் பலரும் நேரில் வந்து இரங்கல் தெரிவித்திருந்தனர்.அந்த வகையில் அஜித் வீட்டில் வேலை செய்யும் பெண் எங்களை அஜித் வீட்டில நல்லாத் தான் பார்த்துக்கிட்டாங்க. அவங்க வீட்டில வேலை செய்த 12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறாங்க.பசங்களை படிக்க வைச்சிருக்கிறாங்க,எங்களை ஒரு தடவை பார்க்க விட்டாலே போதும் என்னும் அவர்கள் கண்ணீர் மல்ல தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement