• May 04 2024

கோபத்தோடு ஈஸ்வரி எடுத்த முடிவு- கோபிக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல் – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்ற சீரியல் பாக்கியலட்சுமி.இந்த தொடர் தற்போது விறுவிறுப்பு நோக்கி நகருகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

ராதிகா மயூவை அழவேண்டாம் என கூற மயூ நான் அழக்கூட உரிமை இல்லையா எனக் கேட்க சொறிடா என மயூவை சமாதானப்படுத்துகின்றார்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ராஜேஷ் என் பொண்ணு என்கிட்ட வர்றதுக்கு எல்லா வேலைகளையும் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் கூடிய சீக்கிரம் அது நடக்கும் அதுக்கு தயாராக இரு என எச்சரித்து விட்டு செல்கிறார். இது எல்லாத்துக்கும் ஒரே வழி நீ கோபியை கல்யாணம் பண்ணிக்கிறது தான் என ராதிகாவின் அண்ணா கூறுகிறார்.

மேலும் இந்த பக்கம் எழில் தாத்தாவிடம் அழுது புலம்பி இப்போ என்ன செய்வது எனக் கேட்கின்றார். பாட்டி கேட்டா என்ன பதில் சொல்வது என தெரியாமல் எழுந்து வெளியே வருகின்றார் எழில்.

ஈஸ்வரி கோபத்தோடு அழுது கொண்டு கோபி பற்றி ஒருத்தன் தப்பா சொல்லிட்டு போறான், அவனை எதுக்கு போக விட்டாய் என எழிலிடம் சத்தம் போடுகிறார்.

இதுவே பாக்கியாவை ஏதாவது சொல்லி இருந்தா அவனை எகிறி அடிப்பாய், கோபி அப்படி என்ன தப்பு பண்ணான். உங்களுக்காகத்தான் உழைக்கிறான் என ஈஸ்வரி அழ, எனில் எதையும் சொல்லாமல் அமைதியாகவே நிற்க உள்ளே இருந்து வந்த கோபியின் அப்பா அவன் சொன்னதெல்லாம் உண்மைதான். கோபிக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு இருக்கு அது எனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும் என கூறுகின்றார்.

மேலும் உங்க தாத்தா சொல்றது உண்மையா என ஈஸ்வரி கேட்க ஆமா பாட்டி நான் அவரை ஒரு பொண்ணோட பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன் என சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சடைந்து கோபிக்கு போன போட்டு உடனே வீட்டுக்கு வா என கோபமாக சொல்கின்றார். இந்தப் பக்கம் இனியா நான் போய் அப்பாவ கூட்டிட்டு வரேன் என சமைக்கும் இடத்திற்கு ஓடுகிறார்.

இந்த பக்கம் கோபி அம்மாவுக்கு விஷயம் தெரிந்திட்டுதா என புலம்பிக்கொண்டே பதற்றத்தோடு காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement