• Sep 08 2024

படுத்த படுக்கையாய் கிடந்த ஈஸ்வரி.. அவசரமாக வந்த ஆம்புலன்ஸ்! ராதிகாவை எச்சரித்த கோபி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி காபி குடித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த கமலா அவருடன் வழமை போல வாக்குவாதம் செய்கிறார். இதனால் உள்ளே தூங்கிக்  கொண்டு இருந்த ராதிகா வந்து கொஞ்ச நேரம் சரி நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா? என இரண்டு பேருக்கும் பேச ஈஸ்வரி உள்ளே அழுது கொண்டு படுகின்றார். கமலாவும் நான் உங்க அண்ணன் வீட்டுக்கே போறேன் என அழுது கொண்டு இருக்கின்றார்

இதை தொடர்ந்து சற்று நேரத்தில் பின் தனது அம்மாவை சென்று சமாதானப்படுத்த பார்க்கிறார் ராதிகா. அதுபோல ஈஸ்வரியின் ரூமுக்கு போய் பார்க்கும்போது அவர் அழுது கொண்டு படுத்திருக்கின்றார். 

அதன்பின் கோபி அங்கே வர ஹாலில் ராதிகாவும் கமலாவும் இருப்பதை பார்த்துவிட்டு அம்மாவைப் பற்றி கேட்கிறார். அதற்கு உங்க அம்மா மதியமும் சாப்பிடல, ரூம்ம விட்டு வெளியே வரவே இல்ல போய் பாருங்க என்ன என்று ராதிகா சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து கோபி ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று பார்த்தபோது ஈஸ்வரி நித்திரையாக இருக்கிறார். ஆனாலும் அவரை எழுப்ப எழுப்ப ஈஸ்வரி  எழும்பவில்லை. இதனால் ஈஸ்வரி மயக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிந்த கோபி பதற்றத்துடன் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி வரவைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். இதன் போது ராதிகாவும் செல்ல முயல நீ வரவேண்டாம் உங்களால தான் என்ட அம்மாவுக்கு இப்படி நிலைமை என்று ராதிகாவுக்கு பேசி விட்டு செல்கிறார் கோபி .

இதனை பார்த்த செல்வி பாக்கியா வீட்டுக்கு சென்று நடந்தவற்றை சொல்லுகிறார். அதன் பின் ஈஸ்வரியை பார்ப்பதற்காக பாக்கியா, ராமமூர்த்தி, செழியன், எழில் ஆகியோர் விரைந்து வருகின்றார்கள். அங்கு ஈஸ்வரி நிலமையை பார்த்து ராமமூர்த்தி கண்கலங்குகிறார்.

அதன் பின்பு டாக்டர் வந்து இருவர் மட்டும் பார்க்கலாம் என்று சொல்ல, கோபிக்கு முதல் ஈஸ்வரியை பார்ப்பதற்கு பாக்கியாவும் ராமமூர்த்தியும் செல்கின்றார்கள். அதன் பின்பு அங்கு ராதிகா வர, கோபி இங்க ஏன் வந்த? உங்களால தான் அம்மாவுக்கு இந்த நிலைமை. இப்ப சந்தோஷம் தானே என் அம்மாவுக்கு மட்டும் எதுவும் நடந்துச்சு சும்மா விடமாட்டேன் என எச்சரிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement