• May 18 2024

ஜீ தமிழின் முக்கிய சீரியல் முடியப் போகிறதா.? கிளைமேக்ஸ் ஷூட்டிங் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியல் தான் என்றென்றும் புன்னகை' .இந்த சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் குறைவான ரேட்டிங் பெற்றாலும் கணிசமான ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியலாகவே அமைகின்றது.

கலர்ஸ் தமிழில் இருந்து நடிகர் தீபக் குமார் மற்றும் நடிகை நட்சத்திரா ஆகிய இருவரும் ஜீ தமிழில் இந்த சீரியல் மூலம் அறிமுகம் ஆனார்கள். மேலும் மார்ச் 16 ஆம் தேதி 2020 ம் ஆண்டு தொடங்கிய என்றென்றும் புன்னகை சீரியல் சில வாரங்களுக்கு முன்புதான் இரண்டு ஆண்டுகளை கடந்தது என்று, சீரியல் குழுவினர் பெரிய அளவில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

மேலும் சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென சீரியலை முடிக்க போவதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கிளைமாக்ஸ் எபிசோடில் சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இருக்கும் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழில் 'என்றென்றும் புன்னகை' சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. அத்தோடு இதில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மங்கம்மா காரி முனவாரலு' என்கிற தெலுங்கு சீரியலின் கதையை தழுவி எடுக்கப்படும் ஒரு நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இடையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் சீரியலில் நாயகனாக நடித்து வந்த நடிகர் தீபக் குமார் ஒரு சில காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து விஷ்ணு காந்த் என்பவர் சீரியலில் நாயகனாக நடித்துவந்தார்.

நடிகர் தீபக் குமாருக்கு சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இவர் திடீரென விலகியதாலே சீரியலுக்கு வரவேற்பு குறைந்து விட்டது என்று பலரும் கூறி வந்தனர்.

திருமணம் செய்ய சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட தீபக் குமார் மீண்டும் கலர்ஸ் தமிழுக்கு சென்று விட்டார். என்றென்றும் புன்னகை சீரியலில் முதன் முதலில் ஹீரோவாக விஷ்ணுகாந்த் நடிக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு விஷ்ணுகாந்த பழகிய முகம் என்றாலும், ஹீரோவாக இதுவே முதல் சீரியல் என்று தான் கூற வேண்டும்.ஆனால், சீரியலில் நடிக்கத் தொடங்கி ஓரிரு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், சீரியல் முடியப்போகிறது என்பது வருத்தத்திற்குரிய விடயமாக அமைகின்றது.

இதோ அந்த புகைப்படம்..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement