• May 05 2024

ராம் சரண், கமல் என மாறி மாறித் தாவும் ஷங்கர்... காரணம் இதுவா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். இவர் 'இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்' எனவும் பெயரெடுத்தவர். சினிமாவில் நடிகர், நடிகைகளின் படங்களிற்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் உள்ளதோ அதே போன்று இவரின் படங்களை எதிர்பார்த்தும் பல்லாயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் காத்திருக்கின்றது.


இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்,  தளபதி விஜய், விக்ரம், அர்ஜுன் எனப் பல முன்னணி நடிகர்களையும் வைத்து பல படங்களையும் இயற்றியிருக்கின்றார். இவர் இயக்கத்தில் உருவாகும் படங்களோ முதலுக்கு மோசம் இல்லாத வகையிலேயே வசூலை பெற்று வருகின்றன. அதுமட்டுமன்றி ஒரு சில படங்கள் வசூல் மழையினை பொழிந்து வெற்றி வாகை சூடியும் இருக்கின்றன.


அந்த வகையில் தமிழில் அதிகம் வசூல் செய்த திரைப்படமான '2.0' திரைப்படத்தையும் இவரே இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் ஆனது உலகம் முழுவதும் 750 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.



இவ்வாறாக பல வெற்றிப் படங்களை இயக்கிய ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணை வைத்து 'RC15' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பலத்த  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது திடீர் மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.


அதாவது இப்படத்தின் வேலைகள் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் இயக்குநர் ஷங்கர் 'RC15' படத்தின் படப்பிடிப்புக்களை கொஞ்சம் காலம் நிறுத்தி வைக்க இருக்கிறாராம். அதே நேரம் ஏற்கனவே 60% படப்பிடிப்பு முடிந்துள்ள கமல் ஹாசனின் 'இந்தியன் 2' படத்தை  மீண்டும் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 



இவ்வாறாக 'இந்தியன் 2' படப்பிடிப்பை மொத்தமாக முடித்துவிட்டு இயக்குநர் ஷங்கர் மீண்டும் 'RC15' படத்தில் இணைய இருக்கிறாராம். இந்த செய்தியானது ராம் சரண் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்திய அதேநேரம் கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement