• May 18 2024

கோவில்கள் குறித்த சர்ச்சை கிளம்பியதால்.. சூரி செய்து வரும் செயல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்னும் படத்தின் மூலம் கவனிக்கத்தக்க காமெடியனாக மாறியவர் தான் சூரி. இவர் விஜய் அஜித் சூர்யா விஷால் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கின்றார்.

இது தவிர தற்பொழுது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். ஜெயமோகன் எழுதிய விடுதலை என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.

இதற்கிடையே கடந்த சுதந்திர தின விழாவின் போது மாப்பு குச்சிகள் தேசியக் கொடியை கட்டியதாக இவர் மீது பல சர்ச்சைகள் கருத்துக்களும் கிளம்பி இருந்தன. அத்தோடு விருமன் பட விழாவில் இவர் பேசியிருந்ததும் பெரிய பூகம்பத்தை கிளப்பியது.

எனினும் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி ஹிட் அளித்த படம் தான் விருமன். இந்த படத்தை கிராமத்து நாயகர்களின் கதைக்களத்தை இயக்கும் முத்தையா இயக்கி இருந்தார். இதில் சூரி  துணை வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மூன்றாம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி, சூர்யா, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சூரி சூர்யாவின் அறக்கட்டளை குறித்து குறிப்பிடுகையில்,  ஆயிரம் கோயில் கட்டுவதை விட, அன்னச்சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என உணர்ச்சிவசமாக பேசியிருந்தார்.

மேலும் இந்த கருத்திற்கு பல கண்டங்கள் எழுந்திருந்தன. ஏற்கனவே ஜோதிகா இதுபோன்ற கருத்தை தெரிவித்துவிட்டு ஆன்மிகவாதிகள் மத்தியில்  கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், சூரியும்  இது போன்ற விவகாரத்தில் சிக்கிக் கொண்டார்.



இதைத்தொடர்ந்து மீண்டும் விளக்கம் அளித்த இவர், தான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் எந்த வேலை தொடங்கினாலும் அவரை மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பித்து ஆரம்பிப்பேன். நான் கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. நான் நடத்தும் ஹோட்டலுக்கு அம்மன் என தான் பெயர் வைத்துள்ளேன். சிலர் நான் சொன்னதை தவறாக எடுத்துக் கொண்டனர். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது . நான் படிக்காதவன் அதனால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என்பதால் நான் அவ்வாறு கூறினேன் என சென்னையில் கடந்த எட்டாம் தேதி நடந்த பட விழாவில் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில்  தற்போது சூரி தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.மேலும்  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement