• Sep 17 2024

இயக்குநர் வெற்றிமாறன் சிகரெட் பிடிப்பதை விட்டதற்கு காரணம் இது தானா?- உண்மையை உடைத்த அவரது மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.கமர்ஷியல் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.அத்தோடு அடுத்ததாக வெளிவந்த ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்றது.

இதனை அடுத்து இவரது இயக்கத்தில் வெளியான விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் அசுரன், விடுதலை ஆகிய படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றார்.


வெற்றிமாறன் பயங்கரமான சிகரெட் யூஸ் பண்ணுபவராக இருந்திருக்கின்றார்.ஆனால் ஒருகட்டத்தில் அவர் சிகரெட்டை விட்டுவிட்டார். இந்தச் சூழலில் அவர் சிகரெட்டை விட்டது குறித்து அவரது மனைவி ஆர்த்தி பேசியிருக்கிறார்.அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எனது கணவர் எடுத்த கடினமான முடிவுகளிலேயே ஒன்று என்றால் அது சிகரெட்டை விடுவதுதான். தொடர்ந்து சிகரெட் அடித்துக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பது போல்  இருப்பதாக சொன்னார்.

உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆஞ்சியோ செய்தோம். அப்போது மருத்துவர்கள் நீங்கள் புகைப்பிடிப்பதை விட்டே ஆக வேண்டும் என சொன்னார். ஆனால் மருத்துவமனையிலிருந்து செல்லும் வழியிலேயே காரை நிறுத்த சொல்லி ஒரு சிகரெட் வாங்கி பிடித்தார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நானும் அப்போது புகைப்படிப்பதை நிறுத்துங்கள் என வற்புறுத்தவில்லை.

ஏனென்றால் நீ சிகரெட் அடித்தால் நான் பேசமாட்டேன் என சொன்னால் அது வேலைக்கே ஆகாது. அவராகவே போகப்போக நாம் நன்றாக இருந்தால்தான் தன்னுடைய கனவை நிறைவேற்ற முடியும் என புரிந்துகொண்டார். சில படங்கள பார்த்தும் அதை எல்லாம் விட்டார். சிகரெட் விட்ட நாளை அவர் சரியாக ஞாபகம் வைத்திருப்பார்" என்றார்.


Advertisement

Advertisement