• May 03 2024

இப்படியா.. 23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்துவது.. ? ட்விட்டரில் காட்டம் தெரிவித்த குஷ்பூ..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பு 80, 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டில் நடிகரும் இயக்குநருமான சுந்தர் C -யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் C இயக்கம், நடிப்பு எனவும் குஷ்பூ நடிப்பு, அரசியல் எனவும் பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில் அவ்வபோது குஷ்பூவை குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷ்பூ, சுந்தர்சியை திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறினார் என்ற தகவல் வைரலாகப் பரவியது.

இதற்கு குஷ்பூ தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விளக்கமளித்துள்ளார். என்னுடைய திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்கள் கொஞ்சமாவது அறிவு பெற்றுக் கொள்ளுங்கள். அது கொஞ்சம் கூட இல்லாததால் தான் என்னுடைய 23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமண சட்டம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று நினைக்கிறேன்.

நான் மதம் மாறவும் இல்லை. அப்படி மாற வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனது 23 வருட திருமண வாழ்க்கை நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. இதற்கு மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தயவு செய்து மலை ஏறவும். உங்களுக்கு இது தேவையா! என்று கூறியுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிப்பு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிறது. அது மட்டுமல்ல சாதாரண விஷயத்திற்கு குஷ்பூ எதற்காக இவ்வளவு டென்ஷன் ஆகிறார், ஒரு வேலை முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டதால் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறாரோ! என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement